" தமிழைப் பொருத்தவரையில் எல்லோருமே முப்பது வயசுக்குள்ளேயே இந்த ஒழுங்கமைப்பை ஏற்றுக்கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். எந்தக் கவிஞன் குடித்துவிட்டு வீடு திரும்பாமல் இருக்கிறான். எந்தக் கலகக்காரன் அண்டை வீட்டாரோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். ஏன் எல்லாக் கவிஞர்களும் சொந்தத்திலேயே கவிதைத் தொகுதி வெளியிட வேண்டும். எந்தக் கவிஞன் நூலக ஆணைக் குழுவில் கவிதை புஸ்தகங்களை எடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதிக் கேட்கிறான். எல்லாமே ‘சிஸ்டம் ‘தான், இல்லையா. "
இப்படி எழுதியிருப்பார் கவிஞ்சர் நம்பி எனப்படுகிற விக்ரமாதித்யன், நியாமான கேள்விதான் இல்லையா ?
நிறைய எழுதிக்கொட்டியும் இன்னும்தான் தமிழ் மொழியில் உள்ள உணர்ச்சி உரசும் வார்த்தைச் சூட்ச்சுமம் அபூர்வமாகவே என் மனதைத் தொடுகின்றது. தமிழ் மொழியில் உரைநடை இலக்கியம் உள்வாங்கிய அளவு கவிதைமொழி அதிகம் பரிசோதனை செய்யப்படவில்லை என்று நினைப்பது. கவிதை என்பதுக்கும் உரைநடை என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.
நல்ல கவிதைகள் என்று பொதுவாக கருதப்படுபவை எனக்கும் எப்பவுமே விசேஷம்தான் . அதை ரெண்டு மூன்றுமுறை திருப்பி நேரமெடுத்து வாசிக்க வேண்டும் போலிருக்கும். அனுபவத்தைப் பொறுத்தவரை என் அலைவரிசைக்கு ஒத்து வரும் பல அமர்க்களமான கவிதைகளை நான் ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன். தினம் தினம் முகநூல் வாசலில் வந்து விழும் நூறு மல்லிகைப்பூக்களில் நாமேதான் நல்ல கவிதைகளைத் தேடிப்பிடித்து படிக்க வேண்டி இருக்கிறது.
நான்
சேமித்து வைத்த வார்த்தைகள்
வேறெங்கோ சேர்ந்து
புகழ்பெற்று
புல்லரிப்பாவுகளாகவே பரவுகிறது.
சகித்துக்கொண்டு போனாலும்
நிரந்தர இழப்பென்னும்
மறக்க முடியாத
ரகசியக் கதவுகளின்பின்
உள்ளூர உடைவு நிகழத்தான்செய்கிறது
அதுவும்
ஒவ்வொரு முறையும்
உந்திச்செலுத்துவதாக
உறுதிமொழிகள் தந்த வார்த்தைகள்
பெரிதான வாஞ்சையுடன்
இன்னொருவரிடம்
அடைக்கலமாகிவிடும் போது !
.
......................................................................................
.
நீங்கள்
அதிகமதிகமாய்
சகிப்புத்தன்மையிழந்து கொண்டே
விமர்சித்த போதெல்லாம்
பிரியங்கள்
இல்லாத ஒரு ரகசியத்விடத்திலதான்
உங்கள் இஷடப்பட
இருத்திவைத்திருந்தீர்கள் ,
ஆராதனைகளுக்கும்
அழகியலுக்கும் இடையே உள்ள
முரண்பாடு உறுத்திக்கொண்டேயிருந்தது .
நிறைவேற்ற முயன்று முடியாமல்
காலம் தாழ்த்தி வரும்
இரங்கல்களில் அனுதாபங்களை
அப்போதும் தேடியதேயில்லை !
.
..........................................................................
.
இன்றைக்கு வரைக்கும்
நியாயமாகவும்
வணங்காமுடித்தனமாவும் தெரிகிற
நான்
முற்றிலும் மாறிவிட்டதாக
அதீத தோழமை உணர்வுடன்
நீங்கள்
பிரகடனம் செய்த போது
உங்களுக்காக இவ்வளவுநாள்
வளைந்து கொடுத்த
பழைய பாதையிலிருந்து
எனக்கான
தனித்துவ இலக்குகளை
தேர்ந்தெடுத்தது பற்றி அறியாதிருக்கலாம் !
.
.......................................................................
.
நீங்கள் விரும்பும்
ஆனாலும்
பரிச்சயமான கோணத்தில்
நீங்கள் தேர்வுசெய்யும்
குறியீடுகளில்
இந்தப் பிழையைச் சரிசெய்ய
இன்னும் இடைவெளிகள் உள்ளது...!
.
..........................................................................................
.
கடந்துபோய்
ஒரு
கணப்பொழுதின்
எண்ணங்களை மறந்துவிட்டேன் என
உண்மையாகவே ஒத்துக்கொள்ள
எத்தனை பெரிதான
ஆற்றமுடியாத துயரத்தை
ஆத்மா சுமந்து வந்திருக்க வேண்டும்?
நினைவுகளைப் பிரட்ட விரும்பாத
அது குறித்த
ஏக்க மனதைவிட
கலவரமான விஷயம் வேறில்லை!
.
.............................................................................
.
பிரித்தறியமுடியாத வாசனையோடு
ரெயில் பயணத்தில்
என்னருகில் வந்திருந்தாள்
எங்கேயோவொரு வயதில் பரிச்சயமான வாசனைதான்
இப்போது
வயதாகியதால் வாசனைகளும்
உணர்வுக்குள்
மாறிக்கொண்டிருக்கிறதால் மங்கிவிட்டதா ?
கொண்டை போட்டு
கலியாண வீட்டுக்கு வெளிக்கிட்ட
சுமங்கலி நாட்களின் வாசனையா ?
சரியாக சொல்லமுடியவில்லை !
ஓடிக்கொண்டிருக்கிற
நாலு பக்கமும்
கசிந்துகொண்டிருந்து அந்த வாசனை
ஏகாதசிக்குப் பிடுங்கிய
துளசி இலைகள் திறுநீரோடு
சேர்ந்து கொண்ட வாசமா ?
அதுவும் தெளிவில்லை !
தண்ணி போலவே
தளும்பிக் கொண்டிருந்தது அந்த வாசனை
வீட்டு முற்றத்தில் பூத்துக் குலுங்கிய
நந்தியா வெட்டையும் கனகாம்பரமும்
கதைத்துக்கொண்ட வாசனையா ?
அதிலும் விபரமில்லை !
என்னை விழுங்குவதுபோல
நகர்ந்து கொண்டிருக்கிற நேரம் .
இயல்பாய் செயல்பட ஆரம்பித்து .
மூச்சுமுட்ட சுவாசித்து
சேமித்துக் கொண்டிருந்தேன் !
தலை துவட்டிய ஈரத் துவாயின் வாசமா ?
இருக்கவே முடியாது
என் நானும் நானும் ஒரு வாசனையே !
தலையைக் குனிந்தபடி
கடினமான அசௌகரியமாகவிருந்தும்
உள்சுவாசத்தில் உல்லாசமாகிகொண்டிருந்தேன் !
அல்லது
தள்ளி விலத்தி நின்ற
அந்த மூன்று நாட்களின் அவஸ்தை வாசனையா ?
ஹ்ம்ம்
இலகுத்தன்மையோடிருக்கிறதால்
எத்திசையிலும் நகரமுடிகிற தீர்மானம் !
வெட்கத்தை த் தள்ளிவிட்டு
அவளிடமே கேட்டிருக்கலாம்
அதட்குள் அவள்தான் எழுந்து போய்விட்டாளே !
.
...........................................................................................................
.
எனக்குக்
கொஞ்சமும் தெரியாமலேயே
எனக்குள்ளேதான் நுழைந்துவிடுகிறது
நீட்ட முடியாத கால்களின்
வலி ,
முடிவு வரும் வரையில்
சமாளித்துவிடலாமென்கிற
சிநேகிதமான சமாதானம்
கலங்கல் நீரில் விழும் .
வெளிச்சங்களில்லா நிழல்,
ஒவ்வொரு
ஏமாற்றங்களுக்கும்
எதிர்பார்ப்புகளுக்குமிடையிலான
விழித்தபடியிருக்கும் அலைக்களைப்புகளில்
மனசிலும் இறுக்கிக் குத்திவிடுகிற
பரிதவிப்பு
எந்த எதிர்ப்புமின்றி அப்படியே சாய்ந்துவிடுகிறது,
.
..........................................................................................................
.
எழுதியேவிடுவதென்று
ஆயத்தமாகிவிடும்போதோ
அல்லது
தள்ளிப்போடும் உத்தேசங்கள்
சோம்பலாகியே வீழும் போதோ
தவறாமல்
பலசொற்கள் கடத்தப்பட்டுவிடுகிறது
.
............................................................................
.
அளவுக்கதிகமான சோம்பல்களுடன்
இன்னும் கொஞ்சம்
அலுப்புகள் சேர்த்துக்கொள்ள
தற்செயலாக வெய்யிலைப் பார்த்தேன்.
கண்ணுக்குள்
நேராகவே குத்தி
இப்போதே எழுந்துவிடு என்றது .
ஒரு
வெய்யில் விடியலில்
அசதியாகத் தூங்குபவன்தான்
உலகத்திலையே உருப்படாத உதவாக்கரை
எனக்கு நானே சொல்லிக்கொண்டே
எழுந்துவிட்டேன்.
.
.....................................................................................
.
ஒரு
விடிகாலையில் வெய்யிலின் உத்தரவாதங்கள்
ஒரு நாள் முழுவத்துக்குமான
உட்சாக விநியோகம் ,
ஸ்டோக்ஹோலம் நகரம்
இன்று
வெய்யிலில் அபரிமிதமாக குளித்தெழும்பும் போலிருக்கு,
மையத்தைக் கடக்கும்போது
முகத்தை
மஞ்சள் நிறத்தோடு கொடுத்துக்கொண்டிருக்கும்
மனிதர்களின் ஆசுவாசத்தை
என்
மஹாலக்ஸ்மி விழுத்தியது திருப்தியே,
இப்போதைக்கு இது போதும்!
பின்மாலையில்
தென்மேக்குப் பருவக்காற்று
கொஞ்சலின் தூறல் போட்டு,
ஏப்பிரல் மழை
மந்தார வானத்திலிருந்து மெல்லவே
பெய்யுமென்ற
வானிலை அறிக்கையை
அதிகம்
கணக்கில் எடுக்கவேண்டிய அவசியமில்லை !
.
........................................................................................................
.
ஒரு
முழுமையான நாளை
முந்திக்கொள்ளும் இரவுகளும்
பிந்தி எழுந்துகொள்ளும் பகல்களும்
சுவாரசியமான இடத்திலிருந்தே
அசைக்கும் பயணங்களில்
தயவுசெய்து
என்னுடைய இடத்தில்
நீங்களாகவே
உட்கார நினைக்கவேண்டாம் !
.
..........................................................................
.
இப்போதுதான்
வயதை விட
எதையாவது
சாதித்தேதீரவேண்டுமென்று
தெரிகிறது.!
.
.............................................................................
.
இளவேனில் பருவத்தில்
பூக்கக் காத்திருக்கும்
டுயூலிப் மலர்களோடு .
என் கால்களிழும்
பலங்களை
சேர்த்துக்கொள்வதென்னவோ
இரண்டு கைகளையும்
தீர்க்கமாக இறுகப்பற்றுவது போல
இப்படியாவது உணரமுடிவதே
இந்த நிமிடத்திலும்
பெரிய நம்பிக்கைதரு விஷயம்தான் !
.
........................................................................................
.
ஆச்சரியம் கொடுக்கும் அனுபவம்
நுட்பமான தந்திரம்
மனதை வடித்துவிடும் முடிவுகள்
இவற்றோடுதான்
எப்போதும்
ஆழமான மனப்பதிவுகளாக
கனவுமுடிகிறது !
.
.....................................................................................
.
நிறங்கள் அடர்தியானவொரு
ஓவியத்தின்
இருட்டின் நிழல்த் தெரிவுகள்
அருகருகில் தடுமாற்றமாய் நிக்க
இப்போதைய தேவையெல்லாம்
ஒரு
மூலையிலாவது
பதுங்கியபடியிருக்கும்
வெளிச்சங்களைத் தேடியெடுக்கும்
முயட்சி மட்டுமே !
.
..................................................................................
.
என்
முகவரி பிரபலமில்லை
இப்போதும்தான்
அதுவொரு கைவிடப்பட்ட பாதையொன்றில்
காலத்தில் பாழடைந்த
முகப்புக் கதவில்
நைந்துபோன எழுத்துக்களில்
அறையப்பட்டுத்
தொங்கிக்கொண்டிருக்கு
வீட்டிலக்கம் !
அதனாலோ தெரியவில்லை
அதிகம்பேர் தேடிவந்ததில்லை
நேசத்துக்குரிய வாசனைகளோடு
தட்செயலாக கண்டுகொணடவர்கள்
தயங்கியபடியே
மரணத்தைப் பார்ப்பது போல
உள்ளே எட்டிப்பார்த்தார்கள் !
என்
தனிமைக்கு இந்த ஒதுங்கிப்போதல்
மிக இயல்பாகப் ஒத்திசைந்ததால்
இன்றைவரையில்
அப்படியேதான் விட்டுவைத்திருக்கிறேன் !
சில நேரம்
அதீதமான இருட்டின் பின்னே
பிரகாசமான
தொலைதூர நடச்சத்திர வெளிச்சத்தை
அடையாளம் கண்டு
உங்களில் ஒருவர் கதவுதட்டி
என்
விலாசம் சரியாவென வினவலாம் ,
மன்னித்துக்கொள்ளுங்கள்
என்
நிசப்த இடுகாட்டு
அமைதியைக்குலைக்கும் யாருக்கும்
நான்
உள்ளிருந்து பதிலளிக்கப்போவதில்லை !
.
..................................................................................................
.
குளிருக்கு
மாங்கல்யத் தாலிகட்டி
பதிவிரதைப் பவ்யத்துடன்
வாழ்நாளெல்லாம் வாழ்க்கைப்பட்ட்து போல
வெய்யிலின் சூடான
கோடை அரவணைப்புகளையும்
துளிர்கள் வயதுக்குவரும்
வசந்தகால வரவுக்கான முன்னறிவிப்புகளையும்
பறவைகளின்
பாடல்கள் அரங்கேறும்
கிழக்குவான உட்சாக உதிப்புகளையும்
மேகங்களே விரும்புகின்ற
பின்னந்தி மயக்க முழுக்குகளையும்
விதண்டாவாதமாக
தள்ளி வைத்து கொண்டிருக்கும்
நகரத்தில்
நானிருக்கிறேன் !
.
.....................................................................................
.
எதிர்பார்த்த வேகத்தைவிட
தயங்கியபடியே
எத்தனையோ வருடங்கள்
அலைக்கழித்தும் கலையாமலிருந்த
அந்த சந்திப்பு
இரண்டு புள்ளிகளை இணைக்குமிடத்தில்
தூக்குமாட்டிய தற்கொலை போலிருந்தது!
ஒன்று
அமரஜீவிதக் காதலும்
அசட்டுத்தனமான காமமும்
நேரடியாகவே சம்பந்தப்பட்டது !
இரண்டாவது
குற்றமும்
அதுக்கான தண்டனையையும்
மேலோட்டமாக உரசிச் செல்வது !
ஆனால்
ரெண்டையும் சேர்த்து
அந்தப் பழைய சம்பவம்
ஒரு
நேர் கோட்டில் மேலும்கீழுமாகவே
தலைகீழாக அறையப்பட்டிருந்தது !
.
..................................................................................
.
எனக்கு
கட்டுப்பாடுகளிலும்
சுதந்திரத்திலும்
காற்றில் பறப்பது போன்ற ஆயாசங்கள்
அப்போதெல்லாமிருந்தது !
மறப்பதை விடவும்
மன்னிப்பதில் குறியாகவேயிருந்தேன் !
நேர்தியாகத் திட்டமிட்டு
நகர்த்திய வியூகங்களைப்
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை !
ஆனாலும்
ஒரு கட்டத்தில்
அவள் உடைந்துபோய்க்
குமுறி அழுத நிமிடத்தை
இப்பவும்
பொக்கிஷமாகவே சேகரித்துவைத்திருக்கிறேன் !
.
......................................................................................
.
இப்படி எழுதியிருப்பார் கவிஞ்சர் நம்பி எனப்படுகிற விக்ரமாதித்யன், நியாமான கேள்விதான் இல்லையா ?
நிறைய எழுதிக்கொட்டியும் இன்னும்தான் தமிழ் மொழியில் உள்ள உணர்ச்சி உரசும் வார்த்தைச் சூட்ச்சுமம் அபூர்வமாகவே என் மனதைத் தொடுகின்றது. தமிழ் மொழியில் உரைநடை இலக்கியம் உள்வாங்கிய அளவு கவிதைமொழி அதிகம் பரிசோதனை செய்யப்படவில்லை என்று நினைப்பது. கவிதை என்பதுக்கும் உரைநடை என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.
நல்ல கவிதைகள் என்று பொதுவாக கருதப்படுபவை எனக்கும் எப்பவுமே விசேஷம்தான் . அதை ரெண்டு மூன்றுமுறை திருப்பி நேரமெடுத்து வாசிக்க வேண்டும் போலிருக்கும். அனுபவத்தைப் பொறுத்தவரை என் அலைவரிசைக்கு ஒத்து வரும் பல அமர்க்களமான கவிதைகளை நான் ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன். தினம் தினம் முகநூல் வாசலில் வந்து விழும் நூறு மல்லிகைப்பூக்களில் நாமேதான் நல்ல கவிதைகளைத் தேடிப்பிடித்து படிக்க வேண்டி இருக்கிறது.
.
ஒவ்வொரு முறையும் நான்
சேமித்து வைத்த வார்த்தைகள்
வேறெங்கோ சேர்ந்து
புகழ்பெற்று
புல்லரிப்பாவுகளாகவே பரவுகிறது.
சகித்துக்கொண்டு போனாலும்
நிரந்தர இழப்பென்னும்
மறக்க முடியாத
ரகசியக் கதவுகளின்பின்
உள்ளூர உடைவு நிகழத்தான்செய்கிறது
அதுவும்
ஒவ்வொரு முறையும்
உந்திச்செலுத்துவதாக
உறுதிமொழிகள் தந்த வார்த்தைகள்
பெரிதான வாஞ்சையுடன்
இன்னொருவரிடம்
அடைக்கலமாகிவிடும் போது !
.
......................................................................................
.
நீங்கள்
அதிகமதிகமாய்
சகிப்புத்தன்மையிழந்து கொண்டே
விமர்சித்த போதெல்லாம்
பிரியங்கள்
இல்லாத ஒரு ரகசியத்விடத்திலதான்
உங்கள் இஷடப்பட
இருத்திவைத்திருந்தீர்கள் ,
ஆராதனைகளுக்கும்
அழகியலுக்கும் இடையே உள்ள
முரண்பாடு உறுத்திக்கொண்டேயிருந்தது .
நிறைவேற்ற முயன்று முடியாமல்
காலம் தாழ்த்தி வரும்
இரங்கல்களில் அனுதாபங்களை
அப்போதும் தேடியதேயில்லை !
.
..........................................................................
.
இன்றைக்கு வரைக்கும்
நியாயமாகவும்
வணங்காமுடித்தனமாவும் தெரிகிற
நான்
முற்றிலும் மாறிவிட்டதாக
அதீத தோழமை உணர்வுடன்
நீங்கள்
பிரகடனம் செய்த போது
உங்களுக்காக இவ்வளவுநாள்
வளைந்து கொடுத்த
பழைய பாதையிலிருந்து
எனக்கான
தனித்துவ இலக்குகளை
தேர்ந்தெடுத்தது பற்றி அறியாதிருக்கலாம் !
.
.......................................................................
.
நீங்கள் விரும்பும்
ஆனாலும்
பரிச்சயமான கோணத்தில்
நீங்கள் தேர்வுசெய்யும்
குறியீடுகளில்
இந்தப் பிழையைச் சரிசெய்ய
இன்னும் இடைவெளிகள் உள்ளது...!
.
..........................................................................................
.
கடந்துபோய்
ஒரு
கணப்பொழுதின்
எண்ணங்களை மறந்துவிட்டேன் என
உண்மையாகவே ஒத்துக்கொள்ள
எத்தனை பெரிதான
ஆற்றமுடியாத துயரத்தை
ஆத்மா சுமந்து வந்திருக்க வேண்டும்?
நினைவுகளைப் பிரட்ட விரும்பாத
அது குறித்த
ஏக்க மனதைவிட
கலவரமான விஷயம் வேறில்லை!
.
.............................................................................
.
பிரித்தறியமுடியாத வாசனையோடு
ரெயில் பயணத்தில்
என்னருகில் வந்திருந்தாள்
எங்கேயோவொரு வயதில் பரிச்சயமான வாசனைதான்
இப்போது
வயதாகியதால் வாசனைகளும்
உணர்வுக்குள்
மாறிக்கொண்டிருக்கிறதால் மங்கிவிட்டதா ?
கொண்டை போட்டு
கலியாண வீட்டுக்கு வெளிக்கிட்ட
சுமங்கலி நாட்களின் வாசனையா ?
சரியாக சொல்லமுடியவில்லை !
ஓடிக்கொண்டிருக்கிற
நாலு பக்கமும்
கசிந்துகொண்டிருந்து அந்த வாசனை
ஏகாதசிக்குப் பிடுங்கிய
துளசி இலைகள் திறுநீரோடு
சேர்ந்து கொண்ட வாசமா ?
அதுவும் தெளிவில்லை !
தண்ணி போலவே
தளும்பிக் கொண்டிருந்தது அந்த வாசனை
வீட்டு முற்றத்தில் பூத்துக் குலுங்கிய
நந்தியா வெட்டையும் கனகாம்பரமும்
கதைத்துக்கொண்ட வாசனையா ?
அதிலும் விபரமில்லை !
என்னை விழுங்குவதுபோல
நகர்ந்து கொண்டிருக்கிற நேரம் .
இயல்பாய் செயல்பட ஆரம்பித்து .
மூச்சுமுட்ட சுவாசித்து
சேமித்துக் கொண்டிருந்தேன் !
தலை துவட்டிய ஈரத் துவாயின் வாசமா ?
இருக்கவே முடியாது
என் நானும் நானும் ஒரு வாசனையே !
தலையைக் குனிந்தபடி
கடினமான அசௌகரியமாகவிருந்தும்
உள்சுவாசத்தில் உல்லாசமாகிகொண்டிருந்தேன் !
அல்லது
தள்ளி விலத்தி நின்ற
அந்த மூன்று நாட்களின் அவஸ்தை வாசனையா ?
ஹ்ம்ம்
இலகுத்தன்மையோடிருக்கிறதால்
எத்திசையிலும் நகரமுடிகிற தீர்மானம் !
வெட்கத்தை த் தள்ளிவிட்டு
அவளிடமே கேட்டிருக்கலாம்
அதட்குள் அவள்தான் எழுந்து போய்விட்டாளே !
.
...........................................................................................................
.
எனக்குக்
கொஞ்சமும் தெரியாமலேயே
எனக்குள்ளேதான் நுழைந்துவிடுகிறது
நீட்ட முடியாத கால்களின்
வலி ,
முடிவு வரும் வரையில்
சமாளித்துவிடலாமென்கிற
சிநேகிதமான சமாதானம்
கலங்கல் நீரில் விழும் .
வெளிச்சங்களில்லா நிழல்,
ஒவ்வொரு
ஏமாற்றங்களுக்கும்
எதிர்பார்ப்புகளுக்குமிடையிலான
விழித்தபடியிருக்கும் அலைக்களைப்புகளில்
மனசிலும் இறுக்கிக் குத்திவிடுகிற
பரிதவிப்பு
எந்த எதிர்ப்புமின்றி அப்படியே சாய்ந்துவிடுகிறது,
.
..........................................................................................................
.
எழுதியேவிடுவதென்று
ஆயத்தமாகிவிடும்போதோ
அல்லது
தள்ளிப்போடும் உத்தேசங்கள்
சோம்பலாகியே வீழும் போதோ
தவறாமல்
பலசொற்கள் கடத்தப்பட்டுவிடுகிறது
.
............................................................................
.
அளவுக்கதிகமான சோம்பல்களுடன்
இன்னும் கொஞ்சம்
அலுப்புகள் சேர்த்துக்கொள்ள
தற்செயலாக வெய்யிலைப் பார்த்தேன்.
கண்ணுக்குள்
நேராகவே குத்தி
இப்போதே எழுந்துவிடு என்றது .
ஒரு
வெய்யில் விடியலில்
அசதியாகத் தூங்குபவன்தான்
உலகத்திலையே உருப்படாத உதவாக்கரை
எனக்கு நானே சொல்லிக்கொண்டே
எழுந்துவிட்டேன்.
.
.....................................................................................
.
ஒரு
விடிகாலையில் வெய்யிலின் உத்தரவாதங்கள்
ஒரு நாள் முழுவத்துக்குமான
உட்சாக விநியோகம் ,
ஸ்டோக்ஹோலம் நகரம்
இன்று
வெய்யிலில் அபரிமிதமாக குளித்தெழும்பும் போலிருக்கு,
மையத்தைக் கடக்கும்போது
முகத்தை
மஞ்சள் நிறத்தோடு கொடுத்துக்கொண்டிருக்கும்
மனிதர்களின் ஆசுவாசத்தை
என்
மஹாலக்ஸ்மி விழுத்தியது திருப்தியே,
இப்போதைக்கு இது போதும்!
பின்மாலையில்
தென்மேக்குப் பருவக்காற்று
கொஞ்சலின் தூறல் போட்டு,
ஏப்பிரல் மழை
மந்தார வானத்திலிருந்து மெல்லவே
பெய்யுமென்ற
வானிலை அறிக்கையை
அதிகம்
கணக்கில் எடுக்கவேண்டிய அவசியமில்லை !
.
........................................................................................................
.
ஒரு
முழுமையான நாளை
முந்திக்கொள்ளும் இரவுகளும்
பிந்தி எழுந்துகொள்ளும் பகல்களும்
சுவாரசியமான இடத்திலிருந்தே
அசைக்கும் பயணங்களில்
தயவுசெய்து
என்னுடைய இடத்தில்
நீங்களாகவே
உட்கார நினைக்கவேண்டாம் !
.
..........................................................................
.
இப்போதுதான்
வயதை விட
எதையாவது
சாதித்தேதீரவேண்டுமென்று
தெரிகிறது.!
.
.............................................................................
.
இளவேனில் பருவத்தில்
பூக்கக் காத்திருக்கும்
டுயூலிப் மலர்களோடு .
என் கால்களிழும்
பலங்களை
சேர்த்துக்கொள்வதென்னவோ
இரண்டு கைகளையும்
தீர்க்கமாக இறுகப்பற்றுவது போல
இப்படியாவது உணரமுடிவதே
இந்த நிமிடத்திலும்
பெரிய நம்பிக்கைதரு விஷயம்தான் !
.
........................................................................................
.
ஆச்சரியம் கொடுக்கும் அனுபவம்
நுட்பமான தந்திரம்
மனதை வடித்துவிடும் முடிவுகள்
இவற்றோடுதான்
எப்போதும்
ஆழமான மனப்பதிவுகளாக
கனவுமுடிகிறது !
.
.....................................................................................
.
நிறங்கள் அடர்தியானவொரு
ஓவியத்தின்
இருட்டின் நிழல்த் தெரிவுகள்
அருகருகில் தடுமாற்றமாய் நிக்க
இப்போதைய தேவையெல்லாம்
ஒரு
மூலையிலாவது
பதுங்கியபடியிருக்கும்
வெளிச்சங்களைத் தேடியெடுக்கும்
முயட்சி மட்டுமே !
.
..................................................................................
.
என்
முகவரி பிரபலமில்லை
இப்போதும்தான்
அதுவொரு கைவிடப்பட்ட பாதையொன்றில்
காலத்தில் பாழடைந்த
முகப்புக் கதவில்
நைந்துபோன எழுத்துக்களில்
அறையப்பட்டுத்
தொங்கிக்கொண்டிருக்கு
வீட்டிலக்கம் !
அதனாலோ தெரியவில்லை
அதிகம்பேர் தேடிவந்ததில்லை
நேசத்துக்குரிய வாசனைகளோடு
தட்செயலாக கண்டுகொணடவர்கள்
தயங்கியபடியே
மரணத்தைப் பார்ப்பது போல
உள்ளே எட்டிப்பார்த்தார்கள் !
என்
தனிமைக்கு இந்த ஒதுங்கிப்போதல்
மிக இயல்பாகப் ஒத்திசைந்ததால்
இன்றைவரையில்
அப்படியேதான் விட்டுவைத்திருக்கிறேன் !
சில நேரம்
அதீதமான இருட்டின் பின்னே
பிரகாசமான
தொலைதூர நடச்சத்திர வெளிச்சத்தை
அடையாளம் கண்டு
உங்களில் ஒருவர் கதவுதட்டி
என்
விலாசம் சரியாவென வினவலாம் ,
மன்னித்துக்கொள்ளுங்கள்
என்
நிசப்த இடுகாட்டு
அமைதியைக்குலைக்கும் யாருக்கும்
நான்
உள்ளிருந்து பதிலளிக்கப்போவதில்லை !
.
..................................................................................................
.
குளிருக்கு
மாங்கல்யத் தாலிகட்டி
பதிவிரதைப் பவ்யத்துடன்
வாழ்நாளெல்லாம் வாழ்க்கைப்பட்ட்து போல
வெய்யிலின் சூடான
கோடை அரவணைப்புகளையும்
துளிர்கள் வயதுக்குவரும்
வசந்தகால வரவுக்கான முன்னறிவிப்புகளையும்
பறவைகளின்
பாடல்கள் அரங்கேறும்
கிழக்குவான உட்சாக உதிப்புகளையும்
மேகங்களே விரும்புகின்ற
பின்னந்தி மயக்க முழுக்குகளையும்
விதண்டாவாதமாக
தள்ளி வைத்து கொண்டிருக்கும்
நகரத்தில்
நானிருக்கிறேன் !
.
.....................................................................................
.
எதிர்பார்த்த வேகத்தைவிட
தயங்கியபடியே
எத்தனையோ வருடங்கள்
அலைக்கழித்தும் கலையாமலிருந்த
அந்த சந்திப்பு
இரண்டு புள்ளிகளை இணைக்குமிடத்தில்
தூக்குமாட்டிய தற்கொலை போலிருந்தது!
ஒன்று
அமரஜீவிதக் காதலும்
அசட்டுத்தனமான காமமும்
நேரடியாகவே சம்பந்தப்பட்டது !
இரண்டாவது
குற்றமும்
அதுக்கான தண்டனையையும்
மேலோட்டமாக உரசிச் செல்வது !
ஆனால்
ரெண்டையும் சேர்த்து
அந்தப் பழைய சம்பவம்
ஒரு
நேர் கோட்டில் மேலும்கீழுமாகவே
தலைகீழாக அறையப்பட்டிருந்தது !
.
..................................................................................
.
எனக்கு
கட்டுப்பாடுகளிலும்
சுதந்திரத்திலும்
காற்றில் பறப்பது போன்ற ஆயாசங்கள்
அப்போதெல்லாமிருந்தது !
மறப்பதை விடவும்
மன்னிப்பதில் குறியாகவேயிருந்தேன் !
நேர்தியாகத் திட்டமிட்டு
நகர்த்திய வியூகங்களைப்
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை !
ஆனாலும்
ஒரு கட்டத்தில்
அவள் உடைந்துபோய்க்
குமுறி அழுத நிமிடத்தை
இப்பவும்
பொக்கிஷமாகவே சேகரித்துவைத்திருக்கிறேன் !
.
......................................................................................
.
அருமை
ReplyDeleteமனதோடு பேசும் வரிகள் ..!!
ReplyDelete