Wednesday 23 March 2016

மோனிக்கா.

இதுதான் வாழ்க்கை என்று சலித்துக்கொள்ளும் நேரமெல்லாம் பழைய சம்பவங்கள் முன்னுக்கு வந்து வசதியான  இடத்தில் ஏறி உட்காந்து  கொள்ளும். அதில பல வீழ்ச்சிக்குப் பின்னரான சந்தோசங்கள் வெறும்பேச்சாகிப் போகாமல் ஒரு காலத்தின் நினைவுகளில்  பன்னீரைத் தூவி ஒய்வெடுக்கும் தருணம் மறைக்கவோ ,மறக்கவோ  முடியாத ஒரு சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வந்து தொண்டைகுழியில் இறுக்கிப்பிடித்து நெரிக்கும் 

                                                         இப்பவே சொல்லுறேன், இது  அப்பட்டமான உண்மைக் கதை இல்லை, அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை . விரும்பினால்  முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின்  ஒரு காலகட்டத்தில் நடந்து,மறந்துவிட்டுப் போன  கடந்தகாலப்  பாதையில் ஏனோதானோ  என்று  விசுக்கிவிட்டுப் போன  கற்பனைக் கதை போல...

                                                    மோனிக்காவை முதன் முதல் சந்தித்தது, ஆறு மாதம் " சமையல் இடங்களின் பாதுகாப்பும் ஸ்வீடிஷ் சமையல் சட்ட திட்டமும் " என்ற " டிப்பிளோமா கோர்ஸ் " படித்தபோது, கோடைகாலத்தில் ரெஸ்டாரென்ட் குக் ஆக வேலைசெய்த இடத்தில இருந்து என்னை நிற்பாட்டிய நேரம், கிடைத்த இடைவெளியில் என்னோட சமையல் திறமையை அதிகரிக்க ஜோசித்து, அந்த டிப்பிளோமா லைசென்ஸ் எடுக்கப் படித்தேன் 

                                             கையால கரண்டியைப் பிடிச்சு சமைக்க தெரியுதோ, இல்லையோ அந்த டிப்பிளோமா லைசென்ஸ் கையில இருந்தாதான் ஸ்கன்டிநேவியாவில் குசினிக்க முன் பக்கத்தால உள்ளிடலாம் என்ற ஒரு அவல நிலைமை இருந்தால் வேண்டா வெறுப்பா படிச்சேன். அந்த டிப்பிளோமா லைசென்ஸ்  ஒரு சமையல்காரனின் கன்னத்தில் இருக்கும் அதிஸ்ட மச்சம் போல . அது  இருந்தால் சம்பளமும் கொஞ்சம் அதிகமா  டிமாண்ட் விட்டு கேட்கலாம் என்பதாலும் படிச்சேன்.

                                                              அந்தக் கோர்ஸ் ஒண்டும் நான் யாழ்பாணத்தில குத்தி முறிஞ்சாவது  கம்பஸ் இக்கு போயே ஆகவேண்டும் என்று விழுந்து விழுந்து படிப்பது போல , முறிஞ்சு முறிஞ்சு மண்டையைக் கசக்கிப் படிக்கவில்லை. அந்த லைசென்ஸ் கிடைச்சாப் போதும் எண்டு ஆர்வம் இல்லாமல் படித்தேன். அந்த "டிப்பிளோமா கோர்ஸ் "க்கு பொறுப்பான மோனிக்கா ஆர்வமா படிப்பிசாள். ஸ்வீடிஷ் மொழி அதிகம் எழுத்து வடிவில் தெரியாததால் எனக்கு பல விசியம் விளங்கவே இல்லை.

                                          ஒரு ரேச்ட்டோரென்ட் சமையல் குசினியில் நெருப்பு பிடிச்சா, எந்த வகை அடையாளம் போட்ட  தீ அணைப்பு கருவி, தீ அணைப்பு திரவம், தீ அணைப்பு கெமிகல் பாவிக்க வேண்டும், எந்தவகை உணவு அலேர்யி, உணவு பதனிடல், அதை பாதுகாத்தல் ,கிருமிகள் தொற்று ,பொதுவான சுகாதாரம் ,,என்று பலவிசியம் அதில டிப்பிளோமா பாடத் திட்டமா இருந்து படித்தாலும் பலது படிக்கும் போதே நினைவில்லை 

                                                 ஆனால் ரெஸ்ட்டோரென்ட் சமையல் குசினியில் நெருப்பு பிடித்தால்  சில குறிப்பிட்ட அடையாளம் போட்ட கதவால் வெளியேற வேண்டும் எண்டு  பாதுகாப்பு நடைமுறை இருக்கு.அதையும் சொல்லி தந்தார்கள். அந்த  எந்த அடையாளம் போட்ட எந்தக் கதவால ஓடித்தப்ப வேண்டும் என்ற ஒரு விசியம் மட்டும் நான் ஆரவமா படிச்சேன், படிச்சுக் கிழிச்சதில அது ஒன்றுதான் இன்றை வரை நல்லா தெரியும்.  அந்த நம்பிக்கையில தான் இப்பவும் ரெஸ்டோறேண்டில் குக் ஆக வேலை செய்கிறேன் .
            
                                                   எப்படியோ படிப்பில்  நான் ஆர்வம் இல்லாமல் இருப்பது தெரிந்த மோனிக்கா ,வகுப்பு முடிய எனக்காகவே வேலை மினக்கெட்டு என்னை அந்த இன்ஸ்டிடியுட்ல இருந்த லைபிறேரியில் உள்ள ஒரு அறையில் என்னை இருத்தி வைச்சு முறிஞ்சு முறிஞ்சு சொல்லி தருவாள். அவளவு என் எதிர்காலத்தில் பிரகாசமான விடிவெள்ளிகள் தோன்ற வேண்டும் என்று நினைத்த அப்பாவிப் பெண் மோனிக்கா . ஆனால்  படிக்கிறது  இலுப்பெண்ணை  போல எப்பவும் இருப்பதால் நான் கிடந்தது  நாக்கிளிப் புழு போல நெளிவேன் .

                                            மோனிக்காவும் ஒரு குக் , நல்ல அன்பானவள், ஐஸ்லாந்துக் குதிரை போல நடப்பாள், அவள் முகம் சலவைக்கல்லில செய்த மாதிரி இருக்கும், அவளின் மூக்கு மேல் நோக்கி அடல்ப் ஹிட்லர் மூக்கு போல வளைந்து வலது கன்னத்தில ஒரு கறுப்பு மச்சம் இருக்க வேண்டிய இடத்தில இருக்கும், உதடுகளுக்கு மேலே அதிகமா லிப்டிக்ஸ் போட்டு அதன் விளிம்பில் ஒரு பென்சில் கோடுபோல போர்டரின் போட்டு, தலை மயிரை யூலியா ராபர்ட்ஸ் போல பிரிச்சு விட்டு,கொஞ்சத்தை நெற்றியில் விழ விட்டிருப்பாள்

கழுத்தில நீலநிற அக்குவா மரைன் கல்லு வைச்ச ஒரு சங்கிலி மட்டும் போடிருப்பள். காதிலையும் அதுக்கு மச் பண்ணுற மாதிரி ஒரு தொப்பாஸ் கல்லு வைச்ச தோடு போட்டிருப்பாள். லூயிஸ் வோலுதன் சமர் கலக்சன் வேஸ்ட் போட்டு எப்பவுமே இத்தாலிப் பெண்கள் போல ஒரு கொட்டன் ஸ்கார்ப் கழுத்தில நிரந்தரமாவே கட்டி இருப்பாள். மன்மதன் அம்பு விட்ட மாதிரி இடது கைக் கல்யான ரிங் போடும் விரலில் ஒரு பச்சைக் கலர் எமிரல் கல்லு வைச்ச மோதிரம் போட்டிருப்பாள்.

                                         ஒரு நாள்  

                                 " நான் , இரண்டு பிள்ளைகளுடன் வீடில முறிஞ்சு, உனக்கும் இங்கே நேரம் ஒதுக்கி சொல்லிதாரன், நீ ஏன் ஆர்வம் இல்லாமல் இருக்குறாய், இன்னும் ஒரு கிழமையில் கடைசி பரீட்சை வரப்போகுதே "    

                                  எண்டு குண்டை தூக்கிப் போட்டால், நான் அவள் கலியாணம் கட்டாமல் இருப்பாள் எண்டுதான் நினைச்சேன் ,ஆனாலும் அவள் இரண்டு பிள்ளைகள் எண்டு சொன்னாள், கணவனோ,காதலனோ பற்றி சொல்லவில்லை என்பது கொஞ்சம் நல்ல செய்தியாக இருந்தது,

                                     
சுவீடனில் பெண்கள் பிள்ளை பெற தாலி கட்டிய கணவன் தேவையிலை,அந்தப் பிள்ளைகளுக்கு அப்பாவின் பெயரும் தேவை இல்லை,அதுகளைதான் தீவிரமா ஜோசித்தாலும், கடைசி பரீட்சை வரப்போகுதே எண்டு அவள் சொன்னத நினைக்க பயம் வந்தது,மோனிக்கா மனம் வைச்சா அந்த பரிட்சையில் பாஸ் பண்ணி டிப்பிளோமா லைசென்ஸ் எடுக்கலாம் எண்டு வடிவா தெரிந்தாலும் ,அவளை எப்படி வழிக்கு கொண்டுவாறது எண்டு கொஞ்சம் ஜோசித்தேன்.முதல் அவளைப் பற்றி சில விசியம் தெரியவேண்டும் எண்டு போட்டு , 

                                        மோனிகாவுக்கு மலர்கள் என்றால் விருப்பம்,அவளே வீட்டில கோடைகாலத்தில் நிறைய மலர்கள் தோட்டமா வைச்சு இருக்கிறதா சொல்லி இருந்தாள். நான்  

                                        " ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் என்னிடம் இருக்கு உனக்கு வேண்டுமா, வேண்டும் என்றாள் நானே கொண்டுவந்து உன்னோட தோடத்தில நட்டு விடுறன் "    

                            எண்டேன், அவள் முகம் பிரகாசமாகி    

                          " வாவ் வாவ் ,,அது எனக்கு ரெம்பப் பிடிச்ச மலர், கேள்விப்பட்டு இருக்றேன், ஒரு நாளும் வேண்ட முடியவில்லை, விலையும் அதிகம் ஸ்பெயினில இருந்து வேண்டிக்கொண்டுவரவும் யாரும் இல்லையே"  என்றாள்,

                                        " உன் கணவன் போய் வேண்டி கொண்டுவரலாமே "    

                                              எண்டு நூல் விட்டுப் பார்க்க கேட்டேன், அவள்  

                                            " எனக்கு அப்படியாரும் இல்லை "    எண்டு சொன்னாள். கொஞ்சம் ஜோசித்து,  

                                   " சரி உன் போய் பிரெண்ட் ஆவது போய் வேண்டி கொண்டுவரலாமே "  

                      எண்டு கயிறு  விட்டுப் பார்க்க கேட்டேன், அவள் அதுக்கும்    

                          " எனக்கு அப்படி   யாரும் இல்லை "  

                         எண்டு என் நெஞ்சில பாலை வார்த்து சொன்னாள். அவளே  

                                 " நீ ரெம்ப நல்லவன்,வெளிப்படையானவன் , பார் எப்படி  வஞ்சகம் இல்லாமல் கேள்வி கேட்குறாய், 

                                 " ஹ்ம்ம்,,அதெண்டா  உண்மைதான்  ,,மோனிக்கா "

                               " உன்னைப்போல ஒளிவுமறைவு  இல்லாத ஒப்பின் ஆட்களை எனக்கு மிகவும் பிடிக்கும் , வெளிநாட்டு ஆட்கள் நல்லா ஓப்பின் பிரண்ட்சிப் உள்ள ஆட்கள் என்று  எனக்கு தெரியும்   " 

                                 " ஓ அப்படியா,, நான் போட்ட பிளான் வேர்க் அவுட் ஆகுதே "

                                   " என்ன பிளான் போட்டாய்,,சொல்லு ,,"

                                    " இல்லை,,உனக்கு சாடினியா  மலர்கள் வேண்டி கொண்டுவந்து நட்டு ,,,அதில  இருந்து  என்னத்தையும்  தொடங்கலாம்  என்றுதான்  மோனிக்கா "
                                    
                                    " சனிகிழமை பிள்ளைகள் வீட்டில நிற்பார்கள் ,நானும் ஓய்வாக நிற்பேன்,சமைக்கலாம் உனக்கு , அதால அன்றைக்கே நீ  சாடினியா மலர்களைக் கொண்டு வந்து அதை தோடத்தில உனக்குப் பிடித்த வடிவத்தில நட்டு விடு "

                                      எண்டு சொல்லி, " சமையல் இடங்களின் பாதுகாப்பும்,ஸ்வீடிஷ் சமையல் சட்ட திட்டதுக்கும்  சம்பந்தம் இல்லாத சில டிப்பிளோமா விசியங்கள் அதுக்குப் பிறகு ஆர்வமாகக் கதைத்தாள். 

                                          
ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் பற்றி எனக்கு ஒண்டுமே தெரியாது, மலர்களை மணிக்கணக்கில் பார்ப்பேன்.ஆனால் அவைகளின் ஜாதகம் பார்ப்பதில்லை. முக்கியமா சாடினியா அது  என்ன நிறம் எண்டே எனக்கு தெரியாது. பிறகு எப்படி சடார் எண்டு சொன்னேன் எண்டு நீங்க நினைபிங்க,சொல்லுறன் ,

                                         என்னோட அப்பார்ட்மென்டுக்கு கொஞ்சம் தள்ளி கொஞ்சம் பணக்கார தனிவீடுகளில் பணக்கார வயதான பெருங்குடி மக்கள் வசித்தார்கள்,அதில் ஒரு வீடில இருந்த வயதான கிழவி எப்பவும் தன்னோட வீடுக்கு முன்னால இருந்த மலர்த் தோடத்தில ஏதாவது கிண்டிக்கொண்டு இருப்பா,என்னைக் கண்டால் இழுத்துவைத்துக்   கதைப்பா,சில நாள் கோப்பி போட்டுக் கொண்டுவந்து தந்து பேர்ச்  மரங்களின் என்னை உக்கார வைத்துக் கதைப்பா 

                                                தான் வளர்க்கும் பூனைகள், ஏமாத்திட்டு இன்னொரு பணக்காரியோட போன கணவன், கிரிஸ்மஸ் விடுமுறைக்கு மட்டும் வந்து பார்க்கும் பிள்ளைகள்,தோட்டத்தில் வளர்க்கும் மலர்கள், இவை பற்றி கன நேரம் ஒருவித  தனிமையில் கதைப்பா, ஒரு நாள் எனக்கு ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் தன்னிடம் வளர்வதாகவும், அவை வேறு யாரிடமும் இங்கே இல்லை எண்டு சொல்லி எனக்கு அதைக் காட்டி இருக்குறார், அதைவிட தனக்கு பின்னேரம் சரியா கண் தெரியாது எண்டும் சொல்லி இருக்குறா, 

                                 இப்படிதான் நாங்கள் வாழ்கையில் சந்திக்கும் மனிதர்கள் சொல்லும் தகவல்களை, நாங்கள் அதிகம் கணக்கில் எடுப்பதில்லை,ஆனால் அவைகள் வேற ஒரு சந்தர்ப்பத்தில் உதவலாம்,நான் அந்த மனிசியின்,வீட்டை நினைச்சுப் பார்த்தேன்,நான் நினைச்ச மாதிரி அந்த வீட்டுக்கு வெளியே வேலி சின்னதா ஏறிப்பாயக் கூடிய மாதிரி இருந்தது நினைவு வந்தது. 

                                          
சொன்ன மாதிரியே ஒரு வெள்ளிகிழமை நாள் இரவு,கிழவி வீட்டை போனேன், ஜன்னல்களில் திரைச்சீலை போட்டு மூடி, வெளிச்சம் இல்லாமல், கிழவி உசிரோட இருக்கிற சிலமன் ஒண்டுமே இல்லாமல் இருக்க,வெளியே அப்பிள் பழங்கள் மரத்தைச் சுற்றி விழுந்து கிடக்க, ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் இருக்கிற இடத்தைப் பார்த்தேன்,எனக்காகவே நல்ல பொலிவா அந்த மலர்கள் வளர்ந்து இருந்தது, 

                                       அந்த டிப்பிளோமா லைசன்ஸ் நினைவு வர, ஜோசிச்சுப் போட்டு, நானும் மனுஷன் தானே,நானும் எல்லாரும் போல வாழ்கையில் முன்னேறத்தானே வேண்டும் எண்டு சொல்லிக்கொண்டு, கிழவிய நினைக்கப் பாவமா இருந்தது ,என்றாலும் பகவத் கீதை சொன்ன   

                        " உன்னுடையது ஏதோ அது நாளை மற்றொருவனுடையதாகிறது " 

                                    என்ற  சுலோகம் நினைவுவர, சத்தம் இல்லாமல் சாடினியா மலர்கள் வேலையை முடிச்சிட்டு,அந்த தோட்டதில சில மலர்கள் தண்ணி இல்லாமல் வாடி இருந்தது பார்க்க பரிதாபமா இருக்க அதுகளுக்கு கொஞ்சம் தண்ணி குழாயில பிடிச்சு நல்லாக் குளிப்பாட்டிப் போட்டு ,ஒரு கடதாசிப் பெட்டியில் சாடினியா மலர்களை வேரோட பிடுங்கி அடுக்கிக் கொண்டு வந்திட்டேன் .

                                    
சனிகிழமை ,பஸ் பிடிச்சு மோனிக்கா வசிக்கும் புறநகர்ப் பகுதியில் உள்ள அவள் வீட்டுக்குப் போனேன் அவள் வீடு வில்லா என்ற தனி வீடு,வீட்டைச் சுற்றி நிறைய புல் வெளிகளும்,தோட்டமும் இருக்க, அவளின் அப்பன் வீட்டு சொத்துப்போல இருந்தது அந்தப் பழங்கால வீடு. என்னை வெளிப் படலையில்க் கண்டதும் மோனிக்கா  ஓடி வந்து மலர்களை ஆச்சரியமா பார்த்தாள், என்னை அதைவிட ஆச்சரியமா பார்த்தாள் ,  

                            " எங்க நட்டா அழகா இருக்கும் "  

                               எண்டு அட்வைஸ் கேட்டாள்,எனக்கு மலர்த் தோட்டவேலை எண்டால் என்ன எண்டே தெரியாது, சும்மா  

                          " இங்கே இதய வடிவில் நட்டா நல்லா இருக்கும் எண்டு சொன்னேன் ",    

                          " இதய வடிவில் நட்டா நல்லா இருக்கும் " 

                                                                            எண்டு  சொல்ல அவளுக்கு முகம் சிவந்திட்டுது ,பெண்களின் மென்மையான இதயம் அப்படிதான் சடார் என்று சில சொற்களில் சறுக்கும். எனக்கு ஏறக்குறைய அந்த டிப்பிளோமா லைசென்ஸ் கையில கிடைச்ச மாதிரி இருந்தது,அதுக்கு பிறகு அவள்,    

                          " உனக்கு ஏதாவது சமைக்கிறேன், வேலை முடிய எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம் "    

                                      எண்டு சொல்லி வீட்டுக் உள்ளபோய் குசினி ஜன்னலுக் கால நான் குனியாமல் நிமிராமல் வேலை செய்யும் அழகைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்,

                                      
நான் கொஞ்சம் வேண்டா வெறுப்பா குனிஞ்சு நிலத்தைக் கிண்டினேன், நிண்ட நிலையில பூ கன்றுகளை ஒவ்வொன்றா தூக்கிப் போட்டு காலால,மண்ணைத் தள்ளிப் போட்டு கொஞ்ச மலர்களை நடத்தொடங்க அவளோட இரண்டு சிறிய பெண் குழந்தைகள் நான் என்ன செய்யுறன் எண்டு பார்க்க மெல்ல மெல்ல தயங்கி வந்தார்கள் ,வந்து

                         " நீ எந்த நாட்டவன்,  நாங்களும்  அம்மாவும்  வெள்ளையா இருக்குறோம் , நீ ஏன் கருப்பா இருக்குறாய் "

                           எண்டு கேட்க, ஒரு சின்னப் பெண் என்னை வந்து தொட்டுப் பார்த்தாள், நான்

                        " நீ ஏன் இப்ப என்னை தொட்டுப் பார்த்தாய் "

               எண்டு கேட்டேன் அவள்,

                                     " நான் நினைச்சேன் நீ கறுப்பு பெயின்ட் அடிச்சு இருக்குறாய் ஆக்கும் " எண்டு சொன்னாள்

                                  நான் முதுகுக்குப் பின்னால திரும்பிப் பார்த்தேன்.மோனிக்கா குசினி ஜன்னலில் நாடிக்கு கை முண்டு கொடுத்துக்கொண்டு ,எங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்,  ஒரு அரை மணித்தியாலம் குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில  வேலை செய்து இருப்பேன்,அந்தக் குழந்தைகள்  

                         " நீ முறிஞ்சு முறிஞ்சு வேலை செய்கிறாய்  உனக்கு களைப்பா இருந்தா ஒய்வு எடு "    

                              எண்டு சொன்னார்கள்,

                                நான் அந்த தோட்டத்தில் போடிருந்த ஒரு வாங்கில இருந்துகொண்டு ,  

                                  " உங்களுக்கு சிலோன் சின்னத்தம்பி குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   யானையைச் சிரிக்க வைத்த கதை தெரியுமா "  

                  எண்டு அந்த குழந்தைகளிடம் கேட்டன்.அவர்கள் கொஞ்சம் ஜோசித்து  

                                " யானை சிரிக்குமா "    

                   எண்டு சந்தேகமாக் கேட்டார்கள் ,நான் சிலோன் சின்னத்தம்பிகுனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   யானையைச் சிரிக்க வைத்த கதை சொன்னேன், அதன் முடிவை சொல்லவில்லை,பிறகு யானை  போல  அவர்கள் இருவரையும் முதுகில ஏற்றி  கொஞ்ச நேரம் அந்த தோட்டத்தில உப்பு மூட்டை சுமந்தேன் 

                                  
சிலோன் சின்னத்தம்பி குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   யானையைச் சிரிக்க வைத்த கதை. அது ஒரு கலியாணம் கட்டுற ஆட்களுக்கு சொல்லுற கொசப்புக் கதை அதை எப்படி குழந்தைகளுக்கு சடைஞ்சு சொல்லி முடிகுறது எண்டு எனக்கே தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருந்த நேரம், அந்த ரெண்டு குழந்தைகளும் என்னோட மடியில வந்து ஏறி இருந்து    

                          " யானை குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   சிரிச்ச முடிவை இப்ப சொல்லு "    

                           எண்டு கொண்டு நிக்க, நான் அதை வேறு விதமா,ஒரு நீதிக் கதை போல திசை திருப்பிச் சொன்னேன், ஆபாசம் கொஞ்சமும் இல்லாமல் சொன்னேன் . சொல்லி முடிய அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கவில்லை, பதிலாக நான் எதிர்பார்த்த மாதிரியே   

                                    " யானை பாவம் "    என்றார்கள் ,

                                       நான் கொஞ்சநேரம் டிப்பிளோமா லைசென்ஸ். மோனிக்கா,.ஏன் இந்த உலகதையையே மறந்திட்டேன்,

                                                  குழந்தைகளுடன் பேசும் போது மட்டும்தான் வளர்ந்தவர்களால் உலகத்தை மறக்கமுடியும் போல இருந்தது. 

                                             நான் முதுகுக்குப் பின்னால திரும்பிப் பார்த்தேன்,மோனிக்கா குசினி ஜன்னலில் சிலோன் சின்னத்தம்பி  குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   யானையைச் சிரிக்க வைத்த கதை போல கோப்பி கோப்பையைக் கையில வைச்சுக்கொண்டு எங்களையே சந்தோஷமாப் பார்த்துக்கொண்டு இருந்தாள். 

                                                  
அதுக்குப் பிறகு நாங்கள் எல்லாருமே சிரிச்சு சிரிச்சு சாப்பிடும் போது .மோனிக்கா என்னை விழுங்கிற மாதிரிப்   பார்த்தாள். ரெண்டு பிள்ளைகளையும் கொண்டு போய் ஹோலில் இருந்த சோபாவில் இருத்திப்போட்டு, அவர்களுக்கு டெலிவிசனில் கார்டூன் படம் போட்டு ஓடவிட்டுப் போட்டு என்னிடம் வந்து     

                          " நீ என்ன லீனாவுக்கும்,லின்டாவுக்கும் மடியில வைச்சு சொன்னனி "    

                      எண்டு கேட்டாள் மோனிக்கா , நான் சிலோன் சின்னத்தம்பி யானையைக் குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   சிரிக்க வைத்த உண்மையான,  கலியாணம் கட்டுற ஆட்களுக்கு சொல்லுற, உதவாக்கரை   கொசப்புக் கதையை கொஞ்சம் அவளுக்கு புரியிற மாதிரி சொன்னேன் ,அவள் விழுந்து விழுந்து சிரிசாள் ,    

                             " அடப்பாவி இவளவு உதவாத கொசப்பு கதையா ,,,இதெல்லாம் தெரிஞ்சு நீ எங்க உருப்படப் போறாய், ஆனாலும் குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில  யானையை சிரிக்க வைச்ச அந்த மனுஷன் கெட்டிக்காரர்,,"

                                         "  ஹி...ஹி....ஹிஹி  "

                                                   அவர் உன்னோட நாட்டு ஆள்  போல இருக்கே,,, , அடப்பாவிகளா யானையை வைச்சு நீ பிறந்த நாட்டில இப்படி எல்லாம் கொசப்பு கதை உருவாக்குவின்களா,," 

                                          " ஹிஹி...ஹிஹி "

                                                 " ,அந்த யானை பாவம்பா, ஆனாலும் அந்த சின்னடம்பி கொஞ்சம் உன்னைப்போல எடக்கு முடக்கான வில்லங்கமான ஆளா இருப்பார் போல  "  

                                                 எண்டு சொன்னாள், சொல்லி அடக்க முடியாமல் சிரிச்சாள். போகும் போது ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் கொண்டுவந்து நட்டத்துக்கு நன்றி என்றால் , நான்  அவள் வீட்டு வெளிக் கதவில் முதுகை குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில முண்டு கொடுத்துக்கொண்டு ,   முறிஞ்சு முறிஞ்சு வேலை செய்கிற அந்தக் சாடினியா மலர்கள் களவு கொடுத்த கிளவிய நினைச்சேன்,

                                    போக வெளிக்கிட , மறுபடியும்  அடக்க முடியாமல் சிரிச்சாள். ஏன் சிரிக்கிறாய் மோனிக்கா , முதலில் சொல்லிப்போட்டு சிரி  என்றேன் ,

                                              " அந்த உதவாத கொசப்புக்  கதை  ,,,இதெல்லாம் தெரிஞ்ச நீ எங்க உருப்படப் போறாய் என்று நினைக்க சிரிப்பு வருகுது   , ஆனாலும் குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில  யானையை சிரிக்க வைச்ச அந்த  ஷின்னடம்பி ,  அந்த  ஆள்  ஷின்னடம்பி போல நிறைய ஆட்கள் நீ பிறந்த உன்னோட நாட்டில இருப்பாங்க போல,,,ஜீசஸ்கிரிஸ்ட் ,, "   ,

                                                  என்று சீரியஸ் ஆகச் சொன்னாள். நான் சும்மா நான் பிறந்த என் தாய்த் திருநாட்டை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டு வேற அசுமாத்தம் இல்லாமல் கேட்டுக்கொண்டு நின்றேன்     

                                        " பரிட்சைக்கு ஒழுங்காப் படிக்கிறியா , நான் தான் பேப்பர் திருத்துவேன் , நீ எப்படியும் பாஸ் பண்ணுவாய், அதில பத்துக் கேள்வி முக்கியமா நீ விளக்கி விபரம் எழுத வேண்டி வரும், அது சரியா எழுதினால் அதுவே முக்கால் வாசி பாஸ் பண்ண உதவி செய்யும்  "  

                  எண்டு சொல்லி என்னோட நெஞ்சில பாலை வார்த்தாள்,நான் ஒண்டுமே சொல்லவில்லை, பேசாம வந்திட்டேன் , நான் போக வெளிக்கிட மோனிக்கா கிட்டவந்து  

                            " உன்னிடம் ஒரு முக்கியமான விசியம் சொல்ல வேண்டும் "  

                              "  ஹ்ம்ம் சொல்லு "

                                  " நாங்கள் பெண்கள்  ,,சின்ன சின்ன  விசியன்களில் உள்ள அன்பை எப்பவும் சட்டென்று  அடையாளம்  காணுவோம் "

                             "  ஒ அப்படியா,,கேட்கவே நல்லா இருக்கே "

                                "  என்ன சொல்லுறாய் "

                                 " ஒண்டும் இல்லை .." 

                                 " ஹ்ம்ம்,,என்னிடமும்  ஒன்றும்  இல்லை,,ஆனால்  எல்லாம் உன்னிடமே  இருக்கு,,நான் சொல்லுறது விளங்குதா உனக்கு .." 

                                        என்றாள் ,நான் கொஞ்சம் நடுங்கி விட்டேன்,ஒரு வேளை டிப்பிலோமாப் பரீட்சை பற்றி ஏதும் வில்லங்கமா  சொல்லப்போறாலோ  எண்டு இனி தலைக்கு மேல வெள்ளம் வந்த பிறகு கவலைப்பட்டு வேலை இல்லையே எண்டு பேசாமல் வாறது வரட்டும் எண்டு தலையைக் குனிந்து கொண்டு நின்டேன்,  அவள் மறுபடியும்

                                 " ஹ்ம்ம்  இதை உனக்கு கட்டாயம் சொல்லத்தான் வேண்டும்.....ஹ்ம்ம் ....   என்னோட பிள்ளைகள் உன்னைப்போல புது ஆட்களுடன் லேசில சேராதுகள் .....ஹ்ம்ம் ..  உன்னோட எப்படி இப்படி ஓட்டினார்கள் எண்டு ஜோசிக்கிறேன்,,ஹ்ம்ம்  "   

                                   "  குழந்தைகள்  அப்படிதான் , " 

                                       "நீ  என்ன நினைக்கிறாய்   " 

                                 "அந்தக்  கிழவியை  நினைக்கிறன்   " 

                                      "எந்தக்  கிழவியை,,  " 

                                      "சரி,,விடு  அது  வேற  கதை  "  

                                     " நான் என்ன நினைக்கிறன் எண்டு இப்ப சொல்லலாமா  ,,இல்லை  பிறகு  சொல்லலாமா என்று  நினைக்கிறேன் "

                                          எண்டு என் கண்களைப் பார்த்து சொன்னாள்,நான் ஒண்டும் சொல்லாமல் ஹ்ம்ம் எண்டு நானும் பெருமூச்சு விட்டுப்போட்டு வந்திட்டேன்.

                                           
அடுத்த கிழமை பரீட்சை நடந்தது , அதில் என்னோட படித்தவர்கள், போன முறை பெயில் பண்ணியவர்கள் எண்டு பலர் வந்திருந்தார்கள்.  நான் கேள்வித்தாளை பார்த்தேன்,முதலில் இருந்து எல்லாக் கேள்விகளையும் வாசித்தேன் எனக்கு கேள்வியே விளங்கவில்ல்லை . ஜோசிசுப் போட்டு கடைசிக் கேள்வியில இருந்து வாசித்தேன் அது இன்னும் குழப்பமா இருந்தது.

                                         இது சரிவராது ஆறுமாதம் முறிஞ்சு முறிஞ்சு டிப்பிளோமா படிச்சதுக்கு அர்த்தமே இல்லை போல இருக்க, அதிலும் முக்கியமா அவள் சொன்ன பத்துக் கேள்வியில் முதல் அஞ்சு கேள்விக்கு விடை தெரியவில்லை,மிச்ச அஞ்சு கேள்வியே விளங்கவில்லை , பல் தேர்வு வினா எண்டு நாலு விடை தந்து அதில சரியானதைப் புள்ளடி போட சொல்லி இருவது கேள்வி இருந்தது, 

                                                      அதைப் பார்க்க வண்ணத்திப்பூச்சி  நடு  மண்டைக்க  பறந்தது, வேற வழி இல்லாமல் நாலு விடையில் சரியானதைக் கண்டு பிடிக்க எறும்பு புடிச்சு விட்டு பார்க்கலாம் எண்டால் சுவிடனில் எறும்பும் இல்லை , எப்படியும் மோனிக்கா ஏதாவது செய்வாள் எண்டு நினைச்சு தெரிந்த சில கேள்விக்கு மட்டும் பதில் எழுதினேன்,

                               சிலோன் சின்னத்தம்பி யானையைக் கடைசில இருட்டில தேடின மாதிரி மோனிகாவை தேடினேன் அவள் அந்த பரீட்சை நிலையத்திலேயே இல்லை.  எண்டாலும் 

                             " ஆண்டவன் ஒரு கதவை அடைச்சா மறுகதவைத் திறப்பான் " 

                                         எண்டு பைபிளில் சொல்லி இருக்கிறதை நினைக்க, மண்டபக் கதவைத்  திறந்து கொண்டு வேளாங்கண்ணி மாதா  போல மோனிக்கா வந்தாள்,  தூரத்தில நிண்டு எல்லாரையும் பார்த்தாள் ,கிட்ட வந்து என்னோட கதைக்கவில்லை ,  

                                                      நான் பேப்பரை வைச்சு முழிஞ்சு கொண்டு இருக்குறதை ஓரக் கண்ணால பார்த்துக்கொண்டு இருந்தாள். நான் எல்லாம் விளங்கின மாதிரி விடை எழுதுவது போல கேள்வித்தாளில் குனிஞ்சுகொண்டு ரோசாப் பூ படம் கீறிக்கொண்டு இருந்தேன் ,
     
                                நான் விடைப் பேப்பரை அவளிடம் கொடுக்கிற நேரம் சிரிச்சாள்,    

                      " அந்த பத்துக் கேள்வி சரியா எழுதினாயா "    எண்டு கேட்டாள் ,  

                               நான்   " முதல் அஞ்சு கேள்வியும் ,,பிறகு வாற அஞ்சு கேள்வியும் எழுதவில்லை "   எண்டு சொன்னேன்,

                                  அவளுக்கு  முதல் கன்னம் சிவக்க கோபமும், பிறகு இரக்கப்படும் சிரிப்பும் வந்தது ,  நான் அவள் ஏதும் தாறு மாறாய்ப் பேசப் போறாள் எண்டு நினைக்க , மோனிக்கா கிட்ட வந்து ,    

                          " கொஞ்சம் வெளிய வா, அந்த மரத்துக்கு கீழ போட்டுள்ள மர வாங்குக்கு  போவம்  "  

                                   எண்டு சொல்ல ,நானும் போனேன் . இடது கையால தலை மயிரைப்  பின்னுக்குக்  கோதி விழுத்திப் போட்டு, முகத்தை வலது கையால வழிச்சுப் போட்டு, வலது கைச்  சுட்டு விரலை   சொண்டில வைச்சு கிள்ளிப் போட்டு,  ஸ்வீடிஷ் நீலக்கடல்விழிகளால் என் கண்களுக்குள் பார்த்து,

                                 " ஹ்ம்ம்....லீனாவும் ,லிண்டாவும் நீ வந்து தோட்டத்தில பூக்கண்டு நட்டுப் போட்டு போன  பிறகு எப்பவும் உன்னைப்பற்றிக் கேட்குங்கள்,..

                                           " ஹ்ம்ம்     ."

                                   " ..இதெல்லாம் ஏன் சொல்லுறேன் தெரியுமா..ஹ்ம்ம் ..  உன்னோட ஒரு முக்கியமான விசியம் கதைக்க வேண்டும்...ஹ்ம்ம்......"

                                            "இந்த டிப்பிளோமா லைசென்ஸ் கிடைச்சால்,,,"

                                          "............... , கொஞ்ச நேரம் நிற்க  முடியுமா..

                                          " .ஹ்ம்ம்.... " 

                                   "  நான்  விடைத்தாள் பேப்பர்  எல்லாம் கட்டி எடுத்துக்கொண்டு வாறன்,,ஹ்ம்ம் .... " 

                                         எண்டு கேட்டாள். அதுக்கு  நான்

                                                   " இல்லை மோனிக்கா இந்த டிப்பிளோமா லைசென்ஸ் எனக்கு முக்கியம்,  அதுதான் கவலைப்படுகிறேன் , "

                                              " ஆண்டவன் ஒரு கதவை அடைச்சா மறுகதவைத் திறப்பான் " 

                                        " எனக்கு சமையல் வேலை மட்டும் தானே தெரியும், "

                                  "  உனக்கு சமையல் வேலை சரிவராது, "

                                           " வாழ்கையை ஏற்கனவே நல்லா சேறு போலக் கலக்கிப் போட்டு  நடுரோட்டில நிக்கிறேன்,  " என்றேன் "

                                         " ஜீசஸ்கிரிஸ்ட் , நான் என்னவோ கதைகுறேன், நீ என்னவோ விளங்கி கதைகுறாய், ஜீசஸ் கிரிஸ்ட் , " 

                                          "அதுதான் நான் ஜோசிக்கிறேன்  " 

                                         " உனக்கு சமையல் வேலை சரிவராது, என்னோட  அண்ணா சூப்பர் மார்கெட் வைச்சு இருக்கார்,அது என்னோட அப்பாவின் காசில தொடங்கியது, எனக்கும் அரைவாசி பங்கு உரிமை இருக்கு, "

                                                   " ????????? "

                                            " நான் அதில உனக்கு ஒரு வேலை எடுத்து தாரேன், முதலில் நான் சொன்ன விசியத்துக்கு பதில் சொல்லு " 

                                    ,  " மோனிக்கா எனக்கு சூப்பர் மார்க்கெட் வேலை எல்லாம் செய்ய தெரியாது, சமையல் வேலை மட்டுமே தெரியும், "

                                              "  நான் என்னவோ கதைகுறேன், நீ என்னவோ விளங்கி கதைகுறாய்,"

                                                " இந்த டிப்பிளோமா லைசென்ஸ் கிடைச்சால் வீராளி அம்மன் கருனையால மறுபடியும் வேலையை ஆரம்பிக்கலாம் , அதுதான் நான் ஜோசிக்கிறேன் " என்றேன்.

                                                 " ஜீசஸ்கிரிஸ்ட் ,  அது யாரடா வீராளி அம்மன்,,,, உன்னோட கேர்ள் ப்ரெண்டா,,,,சொல்லவே  இல்லையே, ஹ்ம்ம்,,,,, ஜீசஸ்கிரிஸ்ட் ,,,,ஹ்ம்ம்,,,இப்பவாவது சொன்னியே, ஜீசஸ்   கிரிஸ்ட்  , தலைக்கு  கயிறுவிழமுதல் தப்பிட்டேன், என் பிள்ளைகளின் அப்பாவும்,,,,அந்தக்  கழிசடையும்,,எனக்கு  சொல்லவே  இல்லை, ஜீசஸ் கிரிஸ்ட் ,கடைசியில்   ஒருநாள் கையும் மெய்யுமா பிடிச்சேன் ,,,அதுவும்  என்னோட வீட்டு படுக்கை அறையில்.......ஜீசஸ்கிரிஸ்ட் , நான் வேலைக்கு போயிட்டு தவறவிட்ட திறப்பை  திரும்பி எடுக்க வந்த நேரம்,,, " என்று கோபமாக கதைக்கத் தொடங்கினாள் மோனிக்கா, நான் இடை மறித்து 

                                      " இல்லை மோனிக்கா, வீராளி அம்மன் , ஒரு பெண் கடவுள் என்னோட சமயத்தில்,,எங்களின் குல தெய்வம் அவா, அவாவின் கோவிலுக்கு அருகில் தான் நான் பிறந்து வளர்ந்தேன் ,,,, " என்று விபரமா சொன்னேன்  

                                     "  ஜீசஸ்கிரிஸ்ட் , ஹ்ம்ம்,,,ஹ்ம்ம் ..ஜீசஸ்கிரிஸ்ட் , "

                                     என்று சொல்லிக்கொண்டு கேட்டுக் கொண்டு இருந்தாள்.  நான் அவளோட எல்லா ஹ்ம்ம் இலும் தொங்கிக்கொண்டு  நின்றேன்.  மோனிககா வந்து மிச்சக் கதையை முடிவாகச்  சொன்னாள். .

                                                  ." வெண் மணற் பொதுளிய பைங் கால் கருக்கின்கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டுக்  " குறுந்தொகைச்  சுருக்கம் போலச்  சொன்னாள்.... 

                                                         அந்த டிப்பிளோமா லைசென்ஸ் எனக்கு கிடைக்கவில்லை , அது கிடைக்காமல் போனதை விட என்னோட வாழ்கையைத் திருப்பிப் போட்ட வேற ஒரு சம்பவம் நடந்தது.

                  தொடரும்......