ஒன்றுமே
வெளிய தெரியவிடாமல்
பனைமரங்கள்
செம்பாட்டுப் பாதையில்
முகத்தை
மறைத்துக் கொண்டு
மனதுக்குள்
குமுறிக்கொண்டிருக்கு
சுற்றுவட்ட வயல்
வரப்புக் காணிகளோடு
இனி
ஒண்றிலுமே
சம்பந்தப்படவிரும்பாத
அதன்
அசைவுகளைக்
கார்த்திக்கை காற்றும்
தொட விரும்பவில்லை
ஒவ்வொன்றிலும்
நம்பிக்கை இழந்து
ஒதுங்கியிருக்க
விதிக்க வைத்து விட்டுப்
போனவர்களைக்
குறித்துக்
குயில்கள் எழுப்பிய
அவலச் சத்தம்
இப்பவும்
நல்ல நினைவிருக்கு
ஒற்றுமையின்
பலம்
தாய் மண்ணின்
நிலமென்று
சூறாவளிகள் வருமுன்
காவோலை
தத்துவம் சொல்ல
குருத்தோலை கேட்கவில்லை
தந்திரமாக
யுத்தம் செய்து
கோட்டையைப் பிடித்தவர்கள்
ராஜதந்திரங்களில்
கோட்டைவிட்டதை
வேற வழியின்றி
இளம் வடலிகள்
வரலாறாக எழுதிப்பார்க்குது
பழைய
தனிப் பனைகளுக்கு
அடியும் நுனியும் வயதாக
அறளை பெயர்ந்து
ஒரு
விடியாத தேசத்தின்
வரலாற்றை
முழுமையாகச்
சொல்லவே முடியாமல்
இடையில் இறந்து போகலாம்.
..............................................................................
துப்பாக்கிகள்
வரிந்துகட்டிக்கொண்டு
கொள்கைகளைப்
போட்டுத் தள்ளிய
நேரமெல்லாம்
சொல்லித் தீரமுடியாததாய்
இருந்தது இழப்புக்கள்
வேண்டுதல்களைத்
தியாக வேள்வியாக்கி
தேசம் விடியும் நேரம்
பேசுவதுக்குக் காத்திருந்த
வார்த்தைகள்
நிறைவு காணாமல்
தடை செய்யப்பட்டன
பூவும் பிஞ்சும்
தெருவோரம் புயலோடு
போனது வரையிலான
இடை வெளிக் காலத்தில்
அடிமை இனத்தின்
இலட்சியத்துக்கான
வெற்றிடத்தை
இன்னுமொரு
வெற்றிடம் நிரப்பியது
இனியாவது
நாமே நமக்குள் நாமாகி
நெஞ்சுக்குள் நஞ்சு வைத்த
அது போல
மீண்டுமொருமுறை
நிகழ்ந்துவிடக்கூடாது.
வரிந்துகட்டிக்கொண்டு
கொள்கைகளைப்
போட்டுத் தள்ளிய
நேரமெல்லாம்
சொல்லித் தீரமுடியாததாய்
இருந்தது இழப்புக்கள்
வேண்டுதல்களைத்
தியாக வேள்வியாக்கி
தேசம் விடியும் நேரம்
பேசுவதுக்குக் காத்திருந்த
வார்த்தைகள்
நிறைவு காணாமல்
தடை செய்யப்பட்டன
பூவும் பிஞ்சும்
தெருவோரம் புயலோடு
போனது வரையிலான
இடை வெளிக் காலத்தில்
அடிமை இனத்தின்
இலட்சியத்துக்கான
வெற்றிடத்தை
இன்னுமொரு
வெற்றிடம் நிரப்பியது
இனியாவது
நாமே நமக்குள் நாமாகி
நெஞ்சுக்குள் நஞ்சு வைத்த
அது போல
மீண்டுமொருமுறை
நிகழ்ந்துவிடக்கூடாது.
............................................................................................................................
யுத்தம்
ஆரம்பித்து விட்டது
பதிவுகளில்
பல இடங்களில்
இடைமறிப்புத் தாக்குதல்
கருத்துக்களில்
கிளைமோர் கண்ணிவெடிகள்
பாடல்களில்
பல்குழல் பீரங்கிகளின்
இடை விடாத முழக்கம்
கவிதைகளில்
நேரடியான அடிபாடு
கதைகளில்
களத்தில் சிதறிய
வழிமறிப்பு மிதிவெடிகள்
ஊடகங்களில்
ஊடறுப்புச் சமர்
இரவோடு இரவாக
புதிய படை அணிகளின்
விசேட தபளதிகளின்
வீராதிவீர விபரிப்புக்கள்
எண்ட வீராளி அம்மாளாச்சி
இந்த
முகநூலிலாவது
தேச விடுதலை
வெல்லப்படவேண்டும்
இளமைக் கனவுகள்
எல்லாம்
துறந்து போனவர்களுக்காக
புதைந்த இடத்தில்
இன்றொரு நாள்
நினைவுகள்
எழுந்து நிற்கட்டும் ....
................................................................................
தேசம் முழுவதும்
கார்த்திகைப் பூக்கள்
அதை
உள்ளங்கைக்குள்
பிடுங்கி வைக்க
எத்தனையோ காரணங்கள்...
உண்மைகளை
ஓரமாக மூட்டைகட்டி வைச்சு
ஒதுங்கியிருந்து
வேடிக்கை பார்ப்பதுக்கும்
அதைவிடவும்
பொறுமையைச் சுருக்கிவிட்டு
பேசாதிருப்பதுக்கும்
சாட்சியாக இருந்தது
நேற்றைய தொடக்க நிகழ்வு.....
எல்லைகளில்
தனி நிலவு காத்திருக்க
கண்ணுக்குள் அடங்காத
இதய பூமியின்
வயல்கள்வெளியில்
விடுதலைக்குப்
போனவர்கள் போலவே
சாய்ந்து கிடக்கும்
நெற் கதிர்கள்
முழுவதும்
வழிகளை அழிக்காமல்
பூமியின்
ஒரு ஒதுக்கத்தில்
இடம் பிடிக்கப்
பறந்த பறவையின்
இறகில் ஓடிக்கொண்டு
ஆகாயம் முழுவதும்
வலியோடு அலைகிறது
முகவரி இழந்த
இனம்..
கரையெல்லாம் மோதிக்
கடல் மீதும்
தரையெல்லாம் மேவும்
காற்றிலும்
விதைகளைத்
தூவிவிட்டுப் போன
மிகப்பெரிய தியாகத்தை
அணையவிடாமல்
உயிர்ப்பித்து விடுகிறது
சின்னக் தீபவிளக்கு
நினைவுகளைச்
சின்னமாக வைத்து
விடியும் நேரத்துக்கு
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டு
மயானம் எல்லாத்திலும்
வீரமாக இறக்கிய
சவப்பெட்டிகள்
மக்கிப் போனாலும்
உருக்குலையாமல்
இப்பவுமிருக்கிறது
ஒரு வரலாறு.
.......................................................................
அந்த சம்பவங்களை
உண்மையாகவே எழுதநினைத்தேன்
அது
ஒருவிதமாக என்னைப்பார்த்தது
கோவிக்காதே
சரிபிழை சொல்லவரவில்லை என்று
சமாதானம் செய்தேன்
அது
ஒரு பக்கமாகவே
சாய்ந்துகொண்டு நிண்டது
என் பக்கத்தில்
வீராதிவீரம் இல்லை
பட்டுவேண்டிக்கொண்ட அறிவும்
அனுபவமும் மட்டுமேயிருந்தது
தீர்க்கதரிசனம்
கதைக்கத் தொடங்கவே
தேசத்துரோகி என்றது
அதை இன்னும் ஆழமாக
நினைத்திருக்கலாம்
இன்னும் கேவலமாய்ப்பார்த்தது
நானும்
முடிந்தவரையில்
முக்கிக்கொண்டிருந்தேன்
சாட்சிகள் இருக்கா என்று
சர்வாதிகாரமாய்க் கேட்டது
நான்
சங்கதிகள் தெரியுமென்றேன்
எப்பவோ முடிந்த காரியம்
இப்ப எதுக்குக் கிண்டுறாய் என்றது
மண்ணாங்கட்டி
உனக்கு மரியாதை முக்கியம்
எனக்கு மண் முக்கியம் என்றேன்
அது
என் கைகளைப் பற்றிக்கொண்டது .
...........................................................................................................
அரசியல்
உரிமைகளுக்காக
எத்தனை
ஆண்டுகளாய்ப்
போராடினாயென்று
மட்டுமே
குறுக்கு விசாரணையில்
சட்டம் கேட்டது.,
குறிக்கோளை
கைவிடாதிருக்கும்
செயல் குறித்து
அவர்களுக்கு
வருத்தமில்லையென்று
தண்டனை
எழுதி வைத்தது.,
மன்றுகளில்
வழிகாட்டப்படக்கூடும்
வாய்ப்பினை
இழந்துவிட்டத்தை
உணரமுடிந்த போதும்
தீர்புக்கள்
வெட்கப்படவில்லை.,
மிகத்
தெளிவாய் அறிந்த
உண்மைகள்
இரும்புக் கம்பிகளோடு
மோதிக்கொண்டிருக்க.,
முகங்களை
நாலு சுவருக்குள்
எதிரொலித்துத் தேடும்
கைதிகள்
பேசுவதைக் கேட்கவிடாமல்
கண்கள் கட்டப்பட்ட
நீதி தேவதையின்
காதுகளையும்
இறுக்கி மூடிவிட்டார்கள்.
உரிமைகளுக்காக
எத்தனை
ஆண்டுகளாய்ப்
போராடினாயென்று
மட்டுமே
குறுக்கு விசாரணையில்
சட்டம் கேட்டது.,
குறிக்கோளை
கைவிடாதிருக்கும்
செயல் குறித்து
அவர்களுக்கு
வருத்தமில்லையென்று
தண்டனை
எழுதி வைத்தது.,
மன்றுகளில்
வழிகாட்டப்படக்கூடும்
வாய்ப்பினை
இழந்துவிட்டத்தை
உணரமுடிந்த போதும்
தீர்புக்கள்
வெட்கப்படவில்லை.,
மிகத்
தெளிவாய் அறிந்த
உண்மைகள்
இரும்புக் கம்பிகளோடு
மோதிக்கொண்டிருக்க.,
முகங்களை
நாலு சுவருக்குள்
எதிரொலித்துத் தேடும்
கைதிகள்
பேசுவதைக் கேட்கவிடாமல்
கண்கள் கட்டப்பட்ட
நீதி தேவதையின்
காதுகளையும்
இறுக்கி மூடிவிட்டார்கள்.
.......................................................................................................................
நாங்கள்
இப்படிதான் சூனியத்தில்
அலைக்கழிக்கப்பட்டோம்
ஆடிக் கலவரத்திலும்
ஆழிப்பேரலையிலும்
ஆனந்த புரத்திலும்
நந்திக் கழிமுகத்திலும்
வட்டு வாய்க்காலிலும்.....
எங்கள்
வலியை முதுகில்
எப்பவும் சுமந்தோம்
பெயர் மட்டும்
விடுதலை முகவரியில்
முன்னுக்கு முழக்கியது
பின்னுக்கு நாங்கள்.....
சுதந்திரம்
சொல்லி வருவதில்லை
சொல்லாமலே
போன கதைகளும்
சொன்னாலும்
நம்பத்த யாராய் இல்லை....
மனசாட்சி
மண்டியிட்டு
மன்னிப்புக்கோரும்
ஒரு நாள்
நாங்களும்
உண்மைக்கு
விசுவாசமாய்
உசிரோடிருந்ததுக்கு
வரலாறு சாட்சி சொல்லும்
அப்பவும் நாங்கள்
அப்பாவிகள்
போலதான் இருப்போம்.....
இப்படிதான் சூனியத்தில்
அலைக்கழிக்கப்பட்டோம்
ஆடிக் கலவரத்திலும்
ஆழிப்பேரலையிலும்
ஆனந்த புரத்திலும்
நந்திக் கழிமுகத்திலும்
வட்டு வாய்க்காலிலும்.....
எங்கள்
வலியை முதுகில்
எப்பவும் சுமந்தோம்
பெயர் மட்டும்
விடுதலை முகவரியில்
முன்னுக்கு முழக்கியது
பின்னுக்கு நாங்கள்.....
சுதந்திரம்
சொல்லி வருவதில்லை
சொல்லாமலே
போன கதைகளும்
சொன்னாலும்
நம்பத்த யாராய் இல்லை....
மனசாட்சி
மண்டியிட்டு
மன்னிப்புக்கோரும்
ஒரு நாள்
நாங்களும்
உண்மைக்கு
விசுவாசமாய்
உசிரோடிருந்ததுக்கு
வரலாறு சாட்சி சொல்லும்
அப்பவும் நாங்கள்
அப்பாவிகள்
போலதான் இருப்போம்.....
.............................................................................................................................
நீண்ட
இனமான உயிருள்ள
நியாமான
சுதந்திரத்தின்
தொடர் இரத்தக் கதை
எதிர்பார்த்தேயிராத
ஒரு வாய்க்கால் திருப்பத்தில்
முடிந்தது......
அதன் துணிவு வரிகளை எழுதி வைத்த
சாதாரண போராளிகளை
முடிவு மட்டும்
அதன் துணிவு வரிகளை எழுதி வைத்த
சாதாரண போராளிகளை
முடிவு மட்டும்
தன்மான வரலாறு
அதீத கவுரவுத்துடன்
பதிந்து வைத்திருக்கிறது....
பயம்
அவர்களை விட்டுப்
பத்தடி தள்ளியே
எப்போது நின்றது போல
அப்போதும்
தலைமைத்துவ விசுவாசத்
தியாகம் அவர்களை
விட்டு இறுதி நிமிடம்
விலகவேயில்லை.....
தேசத்தின்
தேசியக் கதாநாயகருக்காக
எழுந்துபோன இளையவர்களின்
அர்ப்பணிப்பு வரலாறும்
இனவழிப்பு என்ற பெயரில்
அந்த தேசத்தின்
மூச்சுக் காற்றில்
இறுதி வரையில் இருக்கவேண்டும்.
..........................................................................................................................
துவக்குகளின்
முதல் நுனியில்
நாங்கள்
ஆட்சி செய்த
பிரதேசத்தின்
வரை படங்களுக்குள்
நீ தனியாகவே போகிறாய் ..
ஒரு காலத்தில்
நெஞ்சம் முழுவதும்
வீரம் என்று எழுந்த
தாய் நாட்டுக்கு
இப்ப நெஞ்சம்
முழுவதும் ஈரம் என்று
உன்னை
வழியனுப்ப வேண்டியிருக்கு...
மறக்காமல்
மடத்தடி
வைரவரையும்
கேணியடிப்
பிள்ளையாரையும்
ஆலமர
வீரமாகாளியையும்
மாவிட்டபுரக் கந்தனையும்
கீரிமலை
நகுலேஸ்வரரையும்
கேட்டதாகச் சொல்லு.
எல்லாத்
தெய்வங்களும்
பாதுகாப்பாகப் பார்த்திருந்த
நேரம் தான்
அன்றைய இளையவர்கள்
அரக்கர்களுடன்
மோதி வெடித்து அடிபட
வெளிகிட்டுப்போனார்கள்
இப்போதைக்கு
நான் போக முடியாத
தொலைவில்
முடிந்தால்
பனை வடலிகளுடன்
கதைத்துக்கொண்டாவது
என் வாழ்க்கையும்
சேர்த்தே வாழ்ந்து விடு..
நீ
திரும்பி வரும் போது
நான் தொலைந்து போனால்
உன் விதி
என் விதியை
எதோ ஒரு கணத்தில்
குறுக்கிட்ட
நல்ல நிகழ்வுக்கு நன்றி சொல்லு..
பிரபஞ்ச அளவில்
கவலைப்பட
இப்ப எனக்கு
ஒன்றுமேயில்லை
ஆனாலும்
நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
நான் உனக்குள்ளிருப்பேன்!
................................................................
புரட்சிக் கவிதை
எழுதித்தள்ளி
புதுமை உலகம் செய்ய
உசுப்பேத்திய கவிஞ்சர்
ஐரோப்பாவுக்கு ஓடிப் போக
அதை வாசித்து போட்டு
இயக்கத்துக் போனவன்
ஒரே இரவில்
தடைசெய்யப்பட்டான்.....
அரசியல் அகதியா
புலம் பெயர்ந்து
விடுமுறையில் வந்தவன்
"சுவும்மிங் பூல்" தோண்டி
மாடிவீடு கட்ட ,
உள்ளுரில்
நிலம் உழுத போது
கண்ணி வெடியில
கால் இழந்தவன்
கடன் வேண்டி
"சைகிள் திருத்தும்கடை"
போடுறான்..
ஒழுங்காப் படிச்ச
உயர் வீட்டுப் பெண்
ஸ்கொலர்சிப்பில
அவுஸ்த்ரேலியா போக
உதறித் தள்ளிப் போட்டு
விடுதைலைக்குப் போன
சின்னப்பெண்
சரணடைந்து
கண்காணாமல் புணர்வாழ்ந்து
கற்போடு தப்பி வந்து
எதிர் காலத்தை
வெறித்துப் பார்க்கிறாள்........
காணாமல்போன மகனை
வருசக்கணக்கில
தேடிய அம்மாவுக்கு
அந்தப்
"காணாமல் போனவர் பட்டியலே"
காணாமல் போயிட்டுது
எண்டு பொறுப்பாச்
சொல்லுறான்
அதுக்குப்
பொறுப்பான அதிகாரி ...
விதையானவர் தினத்துக்கு
ரகசியமா விளக்கு ஏற்ற
ஒளிஞ்சு ஒளிஞ்சு
அப்பா வெளிக்கிட
அஜித்தோட
"கட் அவுடுக்கு" பால் ஊற்ற
வெளிப்படையா
வெளிக்கிடுகிறான் மகன்.....
........................................................................
வெள்ளை நிற
ஐரோப்பியக்
கடவுள்களிடம்
இருப்பைப் புதுப்பிக்கச் சென்ற
ஒரு நாள்,
மாணம் ,ரோசம்
இடைமறிக்க,
சூடு ,சொரணை
சுற்றிவளைத்து,
வாழ்விட உறுதியைப்
பறித்தெடுத்து,
கிழித்தெறிந்து,
முகத்தில காறித்துப்பியது
"விட்டு விட்டு
ஓடிவந்த
வீரத்தின் விளைநிலத்தில்
எங்கள் மாணத்தின்
பெயர் சொல்லி
விடுதலைக்கு
வித்தானவர்களின் ,
பெயரில் வெட்கமாயிருந்தது "
காற்று
காதைப்பிடித்து திருக,
மனசாட்சிக்கு
முன் தலையை
குனிந்து
வலி தாங்கமுடியாமல்
நான் நரிபோல ஊளையிட்டேன்!
...............................................................................
கைவிடத் தயார்
என்று தற்காலிகமாக
சொன்ன
இனத்தின் அவமானம்
போலிக் கண்ணீரில்
நனைந்து முடிந்தது...