Tuesday 30 June 2015

.அறிவுக்களஞ்சியதை மடக்கிய அறிவுக்குகொழுந்து ..

புழுதி படிந்த வீதியில் களைத்துப்போய் வந்த ஒளவைப்பிராட்டி ஒருநாள் புளியமரத்துக்கு கீழே நிழல் ஒதுங்கினாள். புளியமரத்தில புளியம்பழம் உலுப்பிக்கொண்டிருந்த முருகப்பெருமான் அதியமான் இரும்பொறை நெல்லிக்கனி கொடுத்த தமிழ்ப் புலவியுடன் அறிவில் விளையாட ஆசைப்பட்டு
                               " வடவேங்கடத் தென் குமரித் தமிழின் இருப்பிடமே .மிகவும் களைத்துப்போய்விட்டாய் போல, புளியமரத்தின் கீழே சற்று நீடுகையில் இளைப்பாறு , அந்த இடைவேளையில் உனக்குப் படிக்க ஒரு கவிதை தருகிறேன், ஆனால் முதலியேயே சொல்லு உனக்கு சுட்ட கவிதை வேணுமா அல்லது சுடாத கவிதை வேணுமா " என்று என்று கந்தக் கடவுள் கேட்க .
                                ஒளவைப்பிராட்டி ஜோசித்தாள், இந்தப் பொடியனைப்பார்க்க எடிக்கேசன் இல்லாத சுண்டங்காய் போல இருக்கிறான் ,ஆனாலும் அவளுக்கு சுட்ட கவிதை என்றால் என்ன சுடாத கவிதை என்றால் என்னவெண்டு தெரியாது. ஆனாலும் ஒரு சின்னப்பொடியன் புளியமரத்தில நிண்டு தமிழ் கூறும் ஆயிடை நல் உலகு தலைவணக்கும் புலவிக்கு சவால் விடுகிறானே என்று நினைத்து , அதென்ன சுட்டது,சுடாடது என்று விளக்கம் கேட்க ஈகோ விடாததால் , பொடியன் முதல் கவிதை போடட்டும் பிறகு அவனை வைச்சு மடக்கலாம் என்று வந்தா வா போனாப் போ கம்மாக்கோ சிக்காக்கோ என்று நினைத்து
                                            " ஆடையால் ஏனை அணியால் அலங்கரித்துப் பெறுபேற வந்த பெரு மூடன் போலிருக்கும் பெருமானே சுட்ட கவிதையே போடு மகனே " என்று சொல்ல .
                                   திருச்செந்தூர் கந்தக்கடவுள் யாரோ பேஸ்புக்கில் எழுதிய ஒரு கவிதையை ஒரு சின்னப் பேப்பரில் எழுதி கீழே தள்ளி விட்டார்
                                                  கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல் மரங்கள் என்று எழுதிய ஒளவைப் பிராட்டி அதை வாசித்துப்போட்டு,நானே கத்தும் கடல் சூள் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அகப்பட்ட காளமேகத்தின் தலையையே தனிப்பாடல் வெண்பாவில் உருடின ஆள். இதெல்லாம் ஒரு கவிதையா என்று பொருமிக்கொண்டு ,
                                     " இப்பூ ,இதுவா கவிதை , " என்று அந்த சின்னப் பேப்பரை ஊதித்தள்ளிவிட
                                        " ஹஹஹஹஹஹா பாட்டி பாட்டி ,நீ அவசரத்துக்கும் ஒரு பார்டி வைக்க தகுதி இல்லாத பார்டி , கவிதை ரெம்ப சூடாக இருக்கா அதுதான் இப்பூ ,இதுவா கவிதை என்று ஊதித்தள்ளி விட்டாயா " என்று கேட்டாணாம்...அறிவுக்களஞ்சியதை மடக்கிய அறிவுக்குகொழுந்து ...
.
.