Tuesday 26 May 2015

காற்றில் வரும் கீதமே.............

சிரேயா கோஸ்ஸல், பவதாரணி , சாதனா சர்க்கம், ஹரிஹரன் ஆகிய நாலு முக்கிய பாடகர்கள் ஒரே பாடலில் பாடி, யமன் கல்யாணி ராகத்தில், இசைஞானி இளையராஜா இசை அமைக்க மெட்டுச் சொல்ல சொல்ல கவிஞ்சர் வாலி அவர்கள் டெலிபோனில் வரிகள் சொல்லி இசை அமைக்கப்பட்ட பாடல்,

                                 இந்தப் பாடல் ஸ்ருதிலயங்கள் தன்னைச் சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் உறவாக அமைந்த யமன் கல்யாணி ராக சுரங்கள் முடிவில் அழகாக வருவது ஒரு அதிசயம். 
காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா என்று தொடங்கும் பாடல் .

                                 தொடக்க வரிகளை சிரேயா கோஸ்ஸல் பாட. அதுவே தொடர்ந்து அவன் வாய்க் குழலில் அழகாக அமுதம் ததும்பும் இசையாக மலர்ந்து நடந்து …அலைபோல் மிதந்து வர பவதாரணியும், சாதனாவும் வருந்தும் உயிருக்கு……ஒரு மருந்தாகும் இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகத் தொடர முடிவில் அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன் என்று ஹரிஹரன் பாட காற்றில் வரும் கீதமே,என் கண்ணனை அறிவாயா அமர்களம் தரும் அமைதியான பாடல் .

                              ஒரு பிரபலமான் கர்நாடக சங்கீத ராகத்தில் ஒரு மருந்தாக, இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாக இசையின் பயனே இறைவன் தானே என மனவெளி எங்கும் சந்தோஷ அலைகளை அடித்து விட்டுச் செல்கிறது.


https://www.youtube.com/watch?v=9FFvSvjoK9g


.